Friday, August 5, 2011
முடிந்தால் கண்டுபிடி!
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
சொன்னதும் வியந்துடுவாய் செய்ததும் மகிழ்ந்துடுவாய்
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வே செய்வாயா
கடற்கறை மணலிலே மெல்ல தவழ்ந்த
சங்கு போன்ற செவியை நீ என் இடத்தில் கொடுப்பாயே
நான் சொல்லும் செய்தியை கேப்பாயே
சொன்னது புரிந்ததென்று வியந்த உன்முகம்சொன்னது
சொன்னதை செய்திடுவாய் செய்து மகிழ்ந்திடுவாய்
மகிழ்ச்சியில் மயங்கியதும் உன்னையே மறந்திடுவாய்
இந்த படலை படித்தவர்க்கும் தெரியாது
நான் சொன்ன செய்தியும் புரியாது
இந்த பாடலிலே நான்அதை சொல்லிவிட்டேன்
முடிந்தால் கண்டுபிடி என்று விட்டுவிட்டேன் :)
Thursday, August 4, 2011
வடிக்க என்கண்ணில் நீருமில்லை
அணைக்க தாய் இருந்து
என் அருகிலே இல்லையட
வழிகாட்ட தந்தை இருந்தும்
என் அருகிலே இல்லையட
வம்பிழுக்க தங்கை இருந்தும்
என் அருகிலே இல்லையட
விளையாட நண்பன் இருந்தும்
என் அருகிலே இல்லையட
உதைக்க தம்பி இருந்தும்
என் அருகிலே இல்லையட
பேச தமிழ் தெரிந்தும்
அறிந்தவர் இங்கு இல்லையட
சமைக்கும் கலை தெரிந்தும்
குறைகூற யாரும் இல்லையட
இன்பத்தை பகிர்ந்து கொண்டு
நகைக்க ஒருவர் இல்லையட
துன்பத்தில் கண் நீர்வடிய
துடைக்க தோழன் இல்லையட
பணம் பொருள் நிறைந்திருந்தும்
பகிர யாரும் இல்லையட
பணம் ஒன்றே போதுமென்று
என்னால் வாழ முடியவில்லை
இல்லறத்தில் துறவி போன்று
வாழ்ந்து எந்த பயனுமில்லை
இந்த பாடல் எழுதும்போது
வடிக்க என்கண்ணில் நீருமில்லை
கனவு உலகினில் அரட்டை அடிப்போம்
கனவை பகிர்ந்து கலவி கற்ப்போம்
கனவு உலகினில் அரட்டை அடிப்போம்
கேட்க இங்கே யாரும் இல்லை
உண்மை உலகில் மற்றவர் தொல்லை
உந்தன் கண்கள் என்னை பார்க்க
எந்தன் கண்கள் உன்னை பார்க்க
சின்ன சிரிப்பு ஒன்றும் உதிக்கும்
ஆசையாய் அப்போது என்னை உதைக்கும்
ஒற்றை பாதையில் தொடாமல் நடக்க
சிறுவிரல்கள் மட்டும் தொட்டே சிவக்க
தொடாத போதுநீ என்னை பார்க்க
தொட்டு தொட்டு நானும் சிரிக்க
உண்மை உலகை நாமும் மறந்து
சிலமயில் தூரம் நாமும் கடந்து
இந்த நொடிகள் இருப்பது போல
கனவு உலகில் என்றும் வாழ
நெருக்கமாக உன் இடம் வந்தேன்
ஆசையாக ஓர் முத்தமும் தந்தேன்
பளார் என்று நீயும் அறைய
வலியில் அன்று கனவும் களைய :)