Friday, August 5, 2011

முடிந்தால் கண்டுபிடி!

ஆல மரத்தடியில் ஆளில்லா பொழுதில்
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா

சொன்னதும் வியந்துடுவாய் செய்ததும் மகிழ்ந்துடுவாய்
கமுக்கமாய் ஒன்று சொல்வேன் செய்வாயா
தோழி! கமுக்கமாய் ஒன்று சொல்வே செய்வாயா

கடற்கறை மணலிலே மெல்ல தவழ்ந்த
சங்கு போன்ற செவியை நீ என் இடத்தில் கொடுப்பாயே
நான் சொல்லும் செய்தியை கேப்பாயே

சொன்னது புரிந்ததென்று வியந்த உன்முகம்சொன்னது
சொன்னதை செய்திடுவாய் செய்து மகிழ்ந்திடுவாய்
மகிழ்ச்சியில் மயங்கியதும் உன்னையே மறந்திடுவாய்

இந்த படலை படித்தவர்க்கும் தெரியாது
நான் சொன்ன செய்தியும் புரியாது
இந்த பாடலிலே நான்அதை சொல்லிவிட்டேன்
முடிந்தால் கண்டுபிடி என்று விட்டுவிட்டேன் :)

Thursday, August 4, 2011

வடிக்க என்கண்ணில் நீருமில்லை

அணைக்க தாய் இருந்து

என் அருகிலே இல்லையட

வழிகாட்ட தந்தை இருந்தும்

என் அருகிலே இல்லையட

வம்பிழுக்க தங்கை இருந்தும்

என் அருகிலே இல்லையட

விளையாட நண்பன் இருந்தும்

என் அருகிலே இல்லையட

உதைக்க தம்பி இருந்தும்

என் அருகிலே இல்லையட

பேச தமிழ் தெரிந்தும்

அறிந்தவர் இங்கு இல்லையட

சமைக்கும் கலை தெரிந்தும்

குறைகூற யாரும் இல்லையட

இன்பத்தை பகிர்ந்து கொண்டு

நகைக்க ஒருவர் இல்லையட

துன்பத்தில் கண் நீர்வடிய

துடைக்க தோழன் இல்லையட

பணம் பொருள் நிறைந்திருந்தும்

பகிர யாரும் இல்லையட

பணம் ஒன்றே போதுமென்று

என்னால் வாழ முடியவில்லை

இல்லறத்தில் துறவி போன்று

வாழ்ந்து எந்த பயனுமில்லை

இந்த பாடல் எழுதும்போது

வடிக்க என்கண்ணில் நீருமில்லை

கனவு உலகினில் அரட்டை அடிப்போம்

கனவை பகிர்ந்து கலவி கற்ப்போம்

கனவு உலகினில் அரட்டை அடிப்போம்

கேட்க இங்கே யாரும் இல்லை

உண்மை உலகில் மற்றவர் தொல்லை

உந்தன் கண்கள் என்னை பார்க்க

எந்தன் கண்கள் உன்னை பார்க்க

சின்ன சிரிப்பு ஒன்றும் உதிக்கும்

ஆசையாய் அப்போது என்னை உதைக்கும்

ஒற்றை பாதையில் தொடாமல் நடக்க

சிறுவிரல்கள் மட்டும் தொட்டே சிவக்க

தொடாத போதுநீ என்னை பார்க்க

தொட்டு தொட்டு நானும் சிரிக்க

உண்மை உலகை நாமும் மறந்து

சிலமயில் தூரம் நாமும் கடந்து

இந்த நொடிகள் இருப்பது போல

கனவு உலகில் என்றும் வாழ

நெருக்கமாக உன் இடம் வந்தேன்

ஆசையாக ஓர் முத்தமும் தந்தேன்

பளார் என்று நீயும் அறைய

வலியில் அன்று கனவும் களைய :)